புதன், 7 மே, 2014

கல்வி என்ன விபச்சாரமா ?

ஒவ்வொரு கல்வி சாலை திறக்கப்படும் போதும்  சிறை கதவுகள் மூட படுகின்றன என்றான் ஒரு அறிஞன் . இது எவளவு உண்மையான தேவ வார்த்தை .கல்வி சாதி இழிவை போக்கி மனித வாழ்வில் முன்னேற்றம் கொண்டு வருகிறது என்பதும் நிதர்சனம் இங்கு  .நாம் கல்வி கற்கிறோம் என்பதன் பயனே மனித தன்மையுடன் வாழ செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் .ஒரு நாடு மதிக்கப் படுகின்றது என்றால் அதற்கு காரணம் அந்த நாட்டின் கற்றவர்களின் அளவை பொறுத்தது தான் .

நம் இன்றைய கல்வியின் நிலை என்ன ?மொத்த மக்களும் ஒரே சமமான கல்வியை தான் படிக்கிறோமா ? இங்கு தமிழ் வழி பள்ளிகளும் ,மெட்ரிக் பள்ளிகளும் ,சி பிஎஸ் ஈ பள்ளிகளும்  என்று  பல வழிகளில் கல்வி சொல்லி தர படுகிறது .முதலில் காமராஜர் காலத்தில் பள்ளிகள் ஆரம்பிக்கும் போது சமத்துவம் வேண்டும் என்பதற்காக உடை ,செருப்பு ,மதிய உணவு என எல்லோருக்கும் சமம் ஆக வழங்க பட்டது ,ஒரே முறை கல்வியும் வழங்க பட்டது அதனால் சமத்துவமும் இருந்தது ,


இப்படி நடைபெற்ற சுதந்திர தமிழகத்தின் தொடக்க கால கல்வி அந்த சமத்துவ பாதையில் இருந்து மெல்ல மெல்ல வெளியேற ஆரம்பித்தது இந்தியாவில் அமல் படுத்த பட்ட தாராளம் மயமாக்கல் கொள்கைக்கு பிறகு ,ஆங்கில வழி கல்வி ஒன்றே ஒரே வழி ,அந்த வழியில் கல்வி பெறாதவர்கள் எல்லாம் வேலை பந்தயத்தில் வீழ்ந்து போவர் என்ற பிரச்சாரம் மிக வேகமாக பரப்ப பட்டது ,மக்கள் மெல்ல மெல்ல காசு சம்பாதிக்க வக்கில்லாத தாய் மொழியை படித்து என்ன பிரயோஜானம் என்று என்ன தொடங்கினர் .


இந்த சூழ்நிலையில் அரசியல்வாதிகள் பணம் உண்டாக்க ஏற்கனவே சமூகத்தை கெடுத்த சாராயம்  காய்ச்சி விற்கும் தொழிலில் இருந்து வெளி வந்து கல்வி சாலை அமைக்கும் தொழிலில் தாங்கள் மது விற்று சம்பாதித்த பணத்தை முதலீடு செய்து ஆங்கில வழி கல்வியை உருவாக்கினர் ,தமிழ் நாட்டின் குக் கிராமத்திலும் கூட ஆங்கில வழி கல்வி சாலைகள் அமைந்தன.அதுவரை நடந்தோ அல்லது அரசு பேருந்தில் தான் கல்வி சாலை சென்று வந்தனர். ஆங்கில கல்வி சாலை ஆரம்பம் செய்த பிறகு எல்லா குக்கிராமத்திலும் பள்ளி பேருந்துகள் சென்று வர தொடங்கியது ,தினமும் சூ அணிதல் , டை கட்டுதல் ,என்று பல வெளி புற அடையாளம் மூலம் ஆங்கில கல்வி மோகம் மிக வேகமா பரவியது .

இந்த நிலையில் அரசு மெல்ல மெல்ல எல்லோருக்கும் கல்வி கொடுக்கும் தனது பொறுப்பில் இருந்து விலக தொடங்கியது .அரசு பள்ளிகளின் உள் கட்டமைப்பு மேம்பாடு செய்யாமல் இருப்பது  ,காலி பணியிடம் நிரப்பாமல் இருப்பது ,எல்லாவற்றிகும் மேல் பெண் குழந்தைகள் படிக்கும்  பள்ளிகளில் கூட கழிவறை கட்ட மறுப்பது மேலும் குடி தண்ணீர் அமைப்பு ஏற்படுத்ததா நிலை என்று அரசு  கல்வி சாலைநடத்தும் தனது பொறுப்பில்  இருந்து வெளியேறி கொண்டு இருந்தது .இதே நேரம் காசு இருக்கும் மக்கள் கூட்டம் கூட்டமாக ஆங்கில கல்விசாலை நோக்கி நடை போட தொடங்கினர் .

தமிழ் நாட்டில் எல்லோருக்கும் சம கல்வி கொடுக்க வேண்டும் என்ற போராட்டம் ஒரு பக்கம் ,எல்லோருக்கும் இலவச கல்வி என்று மறுபக்கம் போரட்டம் இப்படி பட்ட சூழ் நிலையில் தமிழ் நாட்டில் சமச்சீர் கல்வி அமல் படுத்த பட்டது ,இரு  அரசியல் கட்சிகளின் சொந்த சண்டையால் சமசீர் கல்வி அமல் படுத்தவே பல சிக்கல் இங்கு  ,இந்த நிலையில் மெட்ரிக் பள்ளிகள் எல்லாம் ரூம் போட்டு யோசித்து பயனாக எல்லோரும் சி பிஎஸ் ஈ முறைக்கு மாறினார் .அதனால் தாங்கள் கல்விச்சாலை தொழில் தடை இன்றி  செழித்து வளர்ந்தது .

இப்படி பட்ட நிலையில் தான் அரசின் மிக முக்கிய பிளான் கல்வியில் இருந்து வெளியேற வகுக்க பட்டது . அது அரசின் மிக சிறந்த திட்டம் என்று விபச்சார ஊடகங்களால் முன் மொழிய பட்டது ,அது எல்லா தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு செய்ய பட வேண்டும் என்ற அற்புத திட்டம் .பல்வேறு கட்ட தொடர் பேச்சுவார்த்தை பிறகு தனியார் பள்ளிகள் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க ஒப்புகொண்டது .இதில் உச்ச காமெடி என்ன வென்றால் பல இடங்களில் 25 சதவீத பிள்ளைகள் கூட அரசு பள்ளியில் இப்போது கல்வி பெற வில்லை ,அப்படி என்றால் அரசு பள்ளிகளை பூட்ட வேண்டியது தானோ ?


இப்படி தமிழ் நாட்டில் கல்வி சென்று கொண்டு இருந்த நிலையில் இரண்டு தினம் முன்பு தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கூட்மைப்பு  சேர்ந்து வெளியிட்ட அறிக்கையில் 25 கோடி அரசு கழிந்த வருடம் தர வேண்டும் அதை தரவில்லை அதனால் இந்த வருடம் குழந்தைகளை பள்ளியில் சேர்க்க முடியாது என்று தெனாவெட்டாக கூறியது .மேலும் அரசுக்கும் தனியார் பள்ளி கூட்டமைப்புக்கு இடையே நேற்று நடந்த பேச்சு வார்த்தையில்  அரசு 25 கோடி தர ஒப்புகொண்டாதல் தனியார் பள்ளிகள் இந்த வருடமும் குழந்தைகளை சேர்க்கும் என்று நேற்று அறிவித்து உள்ளது அதை அரசின் வெற்றி என்று ஊடகம் நீட்டி முழக்கி வாசிக்கிறது .எவனுக்கும் வெட்கம் இல்லை இங்கு .

இந்த 25 கோடி இருந்தால் எத்தனை பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு ,ஆசிரியர் பணியிடம் நிரப்புதல் இப்படி எத்தனை நன்மைகளை செய்ய முடியும் .ஆனால் அரசுக்கும் அதை குறித்து சிறிது கூட கவலை இல்லை ,கல்விசாலை நடத்த சொன்னால் அது அரசு வேலை இல்லை எல்லா மக்களையும் மடையர்கள் ஆக்கும் குவாட்டர் கடை நடத்துவதே அரசின் வேலை என்று அரசு கள்ள மவுனம் சாதிக்கிறது கல்வி விடயத்தில்  . இங்கு இருக்கும் விபச்சார ஊடகம் காசு வாங்கி கொண்டு கூவுகிறது தனியாருக்கு ஆதரவாக .


உண்மையில் எவனுக்கும் குழந்தைகளில் கல்வி குறித்த அக்கறை இல்லை ,இவர்கள் நடத்துவது விபச்சார விடுதிகள் தானே .காசு கொண்டு வந்தால் புணர்ந்து விட்டு போ என்பது மாதிரி காசு கொண்டு வந்தால் மட்டுமே படித்து விட்டு போ என்கிறது இன்றைய பள்ளிகள் .நாமும் தனியார் பள்ளி ஆங்கில வழி கல்வி ஒன்றே முன்னேற ஒரே வழி என்று ஆழ் மனதில் பதிந்து வைத்து இருக்கிறோம் .நீங்கள் கேட்கலாம் என்னிடம் பணம் இருக்கிறது  எனக்கு பிடித்த பள்ளியில் என் பிள்ளைகளை படிக்க வைக்கிறேன் உனக்கு என்ன என்று .நீங்கள் கேட்பது உங்களை பொறுத்தவரை நியாயம் என்றாலும் ஏறி வரும் கல்வியின் விலையில் அரசு முழுவதும் வெளி வந்த பிறகு நம்மால் படிக்க வைக்க முடியா நிலையில் கல்வி கட்டண கொள்ளை வந்து நிற்கும் காசு கொடுக்க முடிய வில்லை என்றால் படிக்க வேண்டாம் என்பான் தனியார் பள்ளிகள் இன்றே பல இடங்களில் அது தான் நடந்து கொண்டு இருக்கிறது ,மேலும் மக்கள் திரள் மீது பல முறையில் இந்த சமத்துவம் இல்லா கல்வி மிக பெரிய பிளவை கொண்டு வரும் ,ஏற்கனவே சாதி மத பிளவில் சம படுத்த முடியா நிலையில் சென்று கொண்டு இருக்கிறோம் ,இன்னும் அதிக பிளவை தாங்கும் சக்தி இந்த மக்கள் திரளுக்கு இல்லை .இங்கு தேவை எல்லோருக்கும் ஒரே மாதரியான சமத்துவ கல்வி அதுவும் அரசே அதை இலவசமாக வழங்க வைக்க போராடுவது தான் ஒன்றே முடிவு  ,அப்படி நாம் இன்று போராட விட்டால் அடுத்த தலைமுறை கட்டண கொள்ளை தாங்க முடியாமல் ரோட்டில் இறங்கி போராடும் ,அப்போது அந்த  தலமுறை மாணவர்கள் சுட்டு வீழ்த்த படும் நடு ரோட்டில் ,உலகின் பல நாடுகளில் கட்டண கொள்ளை எதிரான மாணவர் போரட்டம் இதை தான் தெளிவு படுத்தி உள்ளது .கரம் கோர்ப்போம் ,இன்றே போரடுவோம்  நாளையை வரும் தலைமுறை கல்வி கனவு நலம் ஆகட்டும் .

திங்கள், 5 மே, 2014

சமத்துவத்தை நேசித்தவன் ................


"உலக தொழிலாளர்களே ஓன்று படுங்கள் 
நீங்கள் இழப்பதற்கு ஒன்றுமே இல்லை 
அடிமைதனத்தை தவிர 
ஆனால் வெல்வதற்கு இந்த உலகமே இருக்கிறது" 

என்று கூறிய மக்களின் மேதை மார்க்ஸ் பிறந்த தினம் இன்று .

பிறப்பும் வாழ்கையும் 

இன்றைய ஜெர்மனியில் ஒரு பகுதியான புருசியாவின் டிரையர் நகரில்  1818 ,மே மாதம் 5ம் தேதி யூத குடும்பத்தில் பிறந்து வழக்கறிஞர் தொழில் செய்த தந்தைக்கு   மூன்றாம் பிள்ளையாக பிறந்தார் மார்க்ஸ் .தன் 17 வயதில் பள்ளி படிப்பை முடித்த மாக்ர்ஸ் சட்டம் பயில பான் பல்கலைகழகம் சென்றார் .வரலாறு ,மெய்யியல் அகிய துறைகளை பெர்லின் பல்கலைகழகத்திலும் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தை யெனா பல்கலைகழகத்தில் பெற்றார் .
1841 பட்டம் பெற்ற மார்க்ஸ் தொடக்கத்தில் இதழியல் துறையில் பணி செய்தார் .ஆனால் அவரின் தீவிர அரசியல் கருத்துகளால் பணியில் தொந்தரவு ஏற்படவே மார்க்ஸ் பாரீஸ் சென்றார் .அங்கு தான் இந்த உலகத்தின்  வரலாற்றை மாற்றி அமைக்க போகும் சம்பவம் ஏற்பட்டது .1844 மார்க்ஸ் ஏங்கெல்சை சந்திக்கிறார் .ஒரு தூய நட்பு அப்போது தான் துளிர் விட்டது . இந்த இருவருக்கும் ஆன நட்பே மூலதனம் மற்றும் கம்னியுஸ்ட் அறிக்கை போன்ற வரலாற்றின் போக்கை மாற்றிய நூல்கள் ஏற்பட காரணம் காரணம் ,அந்த தூய நட்பு மார்க்சின் மரணம் வரை அவரை காப்பாற்றவும் செய்தது .

பெர்லின் பல்கலைகழகத்தில் ஆய்வு மாணவர்கள் என்ற சங்கம் நிறுவி வரலாறு மற்றும் பொருளாதர வாதம் பற்றி விவாதம் செய்து வந்தார் மார்க்ஸ் .முதல் நாள் கேட்கபடும் கேள்விக்கு அடுத்த நாள் பதில் தருவார் அவர் பதிலால் எதிர்த்தவர்கள் வாயடைத்து போவர் .படித்து களைத்து உறங்கா விழிகள் ,வாரப்படாத கேசம் ,தாடியை நீவி கொண்டு மாணவர்கள் புடை சூழ வருவது ,பல்கலைக்கழக வராந்தாவில் ஒரு சிங்கம் போல் நடந்து வருவது என்று அவரை பற்றி பல்கலைகழகமே பேச வைத்தது.


காதல் என்னும் அற்புத சக்தி 

லூத்விகான்  வெஸ்ட்பாலன் என்பவர் ஜெர்மானிய உயர்குடி பிரமுகர் ,அவர் குடும்பமும் மார்கஸ் குடும்பமும் நட்புடன் பழகி வந்தனர் .அந்த உயர் குடியில் தோன்றிய தங்க மங்கையே ஜென்னி .மார்கஸ் கண்கள் மட்டுமன்று  கேசம், தோல் எல்லாமே கருப்பு நிறம் ஜெர்மானியர் வெருப்புடன் நோக்கும் யூத இனம் வேறு ஆனால் ஜென்னி ரைன் லாந்தின் மிக சிறந்த அழகி பிரபுக்கள் வம்சம் . இவ்விருவரையும் வாழ்வில் இணைத்தது சேக்ஸ்பியர் கவிதைகளே .மார்க்ஸ் எல்லா சேக்ஸ்பியரின் கவிதைகளை மனனம் செய்தவர் . ஜென்னியின் தந்தையும் மார்க்சும் சேக்ஸ்பியரின் கவிதைகளை பற்றி எப்போதும் வியந்து பேசுவர் .இதனால் ஜென்னியின் வீடே கவிதைகளால் நிரம்பி வழியும் .அப்படி கவிதை மார்க்சிடம் இருந்து வீறு கொண்டு எழும் அந்த நிலையில் தான் ஜென்னிக்கு மார்க்ஸ் மீது காதல் அரும்பியது .ஜென்னி அகங்காரம் அற்ற அறிவும் தன்னலம் அற்ற தியாகமும் பெண்களை மதிக்கும் சுபாவம் ஆணின் அழகு என்று எண்ணி இருந்தார் அந்த அழகு மார்க்சிடம் நிறைந்து இருந்தது .இவர்கள் காதல் திருமணத்தில் கை கூட எட்டு வருடம் காத்து இருக்க வேண்டி வந்தது .தன் காதல் தேவதை குறித்து மார்க்ஸ் உலகின் மிக சிறந்த பூ ஓன்று இருக்கும் ஆனால் அது கூட தோற்று போய் விடும் அவள் முன்னால் மேலும் ஒரு எரிமலையின் இதயத்தில் வடா மலர் போன்றவள் ஜென்னி என்றார் .,அப்படி பட்ட பெண் தன் வாழ்வில் வர வேண்டும் என்ற எண்ணம் தன அவர் டாக்டர் பட்டம் பெற மூல காரணம் .




என் மகன் உனக்கு உகந்தவன் அல்ல அவனை மறந்து விடு என்று மார்க்ஸ் பெற்றோர் கூறிய வார்த்தைகள் ஜென்னியை துன்பத்தில் ஆழ்த்தியது இந்த நிலையில் மார்க்ஸின் காதல் கடிதம் ஜென்னியை அடைந்தது அதை தன் விரல்கள் நடுங்க எடுத்து பார்த்தாள் கண்ணில் நீர் ததும்பியதால் எழுத்துகள் மங்கலாக தெரிந்தது ,கண்களில் இருந்து மடை திறந்த வெள்ளம் போல் கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்தது அதற்கு காரணம் ஆன அற்புத வரிகள் "இனி வரும் நூற்றாண்டுகள் அனைத்தும் காதல் என்றால் ஜென்னி ,ஜென்னி என்றால் காதல் "

தொழில் 

 பட்ட படிப்பை முடித்து ரைன் கெஜட் பத்திரிக்கை  வேலைக்கு சேர்ந்த பத்து மாதத்தில் அதன் ஆசிரியர் ஆக பொறுப்பு ஏற்றுகொண்டார் .மார்க்ஸ் எழுத்துகள் ஜெர்மானியர் மத்தியில் நம்பிக்கை வெளிச்சத்தை பாய்ச்சின,பத்திரிக்கை வியாபாரம் எகிற ஆரம்பித்தது .  மார்க்ஸ் இடதுசாரி சிந்தனை படைத்வர் ஆக மாறி கொண்டு இருந்தார் ,ஆனால் அவர் தந்தை அவரை குறித்து கவலை கொண்டு இருந்தார் . 1840ல் தத்துவ ஞனி கெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்து கொண்டார் .அவர்களில் மார்க்சின் கருத்துக்கு ஆதரவு கிட்டியது .கிறிஸ்தவ மதம் அறநெறி அற்றது .மனிதனுக்கு விரோதம் ஆன சக்திகள் மனிதனை ஆளுகின்ற மனித தன்மை அற்ற உலகத்தில் உண்டாக்க பட்டதே மதம் என்றார் மார்க்ஸ் .

மோசஸ் கோஸ் என்பவர் தன் நண்பனுக்கு எழுதிய கடிதத்தில் நான் போற்றுகின்ற மனிதர் டாக்டர் மார்க்ஸ் ,அவர் மிகவும் இளம் வயதுகாரர் .அவர் மத்திய கால தத்துவ ஞானத்திற்கு இறுதி அடி கொடுப்பார்.கூர்மையான நகைச்சுவை உணர்வை ஆழமான தத்துவசெறிவுடன் இணைக்கிறார் .ரூசோ ,வால்டேர் ,கோல்பார்க் ,லஸ்லிங்க் ,கெய்னே ,ஆகியோரின் இணைந்த வடிவமே மார்க்ஸ் .மோசஸ் ஏசு நாதர் வருவார் என்று முன் கூட்டி சொன்னது போல் கம்யூனிசப் புரட்சி வர போகிறது என்று முன் கூட்டி சொன்னவர் தான் மார்க்ஸ் என்று எழுதி உள்ளார் . 

புரட்சி 

உலகின் எந்த மூலையில் இருந்தாலும் தொழிலாளன் ஒரே வர்க்கம் சேர்ந்தவனே ,அவர்கள் அனைவரும் ஓன்று சேர்ந்தால் அனைத்து தொழிலாளர் வாழ்வில் மகிழ்வு கிட்டும் என்று கூறியதோடு அல்லாமல் அவர்களை எல்லாம் ஓன்று சேர்க்கும் முயற்சியில் இறங்கினார் .அதை பற்றி எழுத அவர் தொடங்கிய பத்திரிக்கை பெயர் "முன்னேற்றம்" அதனால் அந்த பத்திரிக்கை தடையும் செய்ய பட்டது .இதனால் அவர் நாடு கடத்த பட்டார்,அவருக்கு ஒரே வாய்ப்பு அளிக்க பட்டது ,அது மன்னிப்பு கேட்பது ,ஆனால் மார்க்ஸ் அதை செய்ய வில்லை , 

சில நாட்களுக்கு பின் மார்க்ஸ் பெல்ஜியதில் குடியேறினர் அதனால் அந்த அரசு நடுங்க ஆரம்பித்தது  அப்போது மார்க்ஸ் வயது 27 தான் அந்த இளையவரை பார்த்து ஒரு நாடு நடுங்கியது என்றால்   அவரின் எழுத்து சிந்தனை எத்தனை வீரம் உடையது .நீங்கள் பேனாவை தொட்டால் சிறையில் தள்ள படுவீர் என்று எச்சரிக்கை செய்தது அரசு .அந்த நிலமையில் மார்க்சும் எங்கல்சும் இணைந்து பொதுவுடைமை சங்கத்தை உருவாக்கினர் ,இதில் இருந்த தொழிலாளர்கள் தங்களை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்து கொண்டனர் . 

லண்டன் மாநகரில் பிரமாண்டம் ஆன முதல் கம்யூனிஸ்டு சங்கம் உருவானது ,தொடர்ந்து ஐரோப்பா முழுவதும் உற்சாகம் அடைந்தது ,மார்க்ஸ் ஏங்கல்ஸ் இருவரும் மக்கள் இதயத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தனர் . 1848 பிப்ரவரி 24 பாரிஸ் நகரில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது .மன்னன் லூயி பிலிப் தப்பி ஓடினார் .அப்போது மார்க்ஸ் இருந்த பெல்ஜியம் 
நாட்டு மன்னன் தன் பாதுகாப்பை பல படுத்தி மார்க்சையும் ஜென்னியையும் சிறையில் அடைத்தான் .ஜென்னியை அந்த நாட்டின் தேக விற்பனை செய்யும் பெண் கைதிகளுடன் அடைத்தான் ,அந்த இரவு ஜென்னிக்கு நரகம் ஆக இருந்தது  ,பலமுறை பிரான்சு ,ஜெர்மனி ,இத்தாலி என்று நாடு கடத்த படும் பொது மார்க்ஸ் உதிர்த்த வார்த்தைகள் 

"எல்லா நாடும் என் நாடே 
எல்லா மக்களும் என் மக்கள் 
நானோர் உலக மகன் "

வாழ்வின் சோதனை காலம் 

உலகின் எல்லா மக்களையும் நேசித்ததால் தானே என்னவோ வாழ்கை முழுவதும் சோதனையில் உழன்றார் மார்க்ஸ். வரலாற்று பாதையில் ஜென்னி என்றாவது ஒரு நாள் ஒரு அடி மாறி இருந்தாலும் வரலாறு திசை மாறி இருக்கும்,ஆனால் ஜென்னி தான் நேசித்த பெருமகனின் எண்ணம் ஈடேற தன் வாழ்கையை தந்தார் .பசி அவர் வீட்டில் எல்லோரையும் பிடுங்கி தின்றது .ஜென்னியின் மார்பில் பால் சுரக்காமல் நிற்க தொடங்கியது ,தாய் உண்டால் தானே பிள்ளைகளுக்கு பால் கிடைக்கும் ,ஜென்னியின் மார்பகத்தில் ரத்தம் வழிய ஆரம்பித்தது,அப்போது ஓயதா அழுகை சத்தம் தான் மார்க்ஸ் ஜென்னியின் வீட்டில் எல்லாம் சக மனிதனை நேசிப்பதற்கு கிடைத்த பரிசு .   

வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் வீட்டில் இருந்து வெளியேற வேண்டிய நிலமை கடன் கொடுத்தவர் ஜென்னியின் வீட்டில் இருந்து எல்லா பொருளையும் எடுத்து சென்றனர் அதோடு மூன்று பிள்ளைகளும்  மடிந்தனர் பசியால் .அப்போது ஜென்னி கூறிய வார்த்தை  என் குழந்தை பிறக்கும் போது தொட்டில் இல்லை இறக்கும் போது சவப்பெட்டி வாங்க காசு இல்லை

இப்படி பட்ட காலத்தில் தான் மார்க்ஸ் உலக பொருளாதரம் பற்றி பல தொடர் கட்டுரை எழுதி வந்தார் .1867 செப்டம்பர் 14 மார்க்ஸ் எண்ணும் மண்ணின் மைந்தனின் எழுத்தில் அவன் உழைப்பின்  தியாகத்தில் உருவான மூலதனம் என்ற நூல் புத்தகம் ஆக வெளி வந்தது .அதனை தொடர்ந்து இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகம் ஏங்கெல்சால் கொண்டு வர பட்டது.இன்றும் உலகத்தின் தலைசிறந்த புத்தகத்தில் ஒன்று மூலதனம் ஆகும் .

மூல தனம் நூலின் தேவை :

நமக்கு ஒரு பென்சில் தேவை அதை நாமே சுயமாக உற்பத்தி  செய்ய நீண்ட நேரம் கடின உழைப்பும் தேவை ஆனால் இந்த தொல்லை இல்லாமல் ஒரு விலை கொடுத்து அந்த பென்சிலை கடையில் இருந்து வாங்கி கொள்கிறோம் .நாம் அந்த பென்சிலை வாங்க வில்லை அந்த பென்சிலை தாயரிக்க பயன் படும் உழைப்பிற்க்கு  விலையை கொடுக்கிறோம் .அனால் அந்த பணம் உழைப்பை கொடுத்த தொழிலாளிக்கு கொடுக்க படவில்லை முதல் போட்டதால் முதலாளி மற்றும் வாங்கி விற்கும் வியாபரிக்கு அதன் பலன் கிடைக்கிறது .ஆனால் உழைப்பவன் தன்னை சுரண்டி கொழுக்கும் முதலாளியை கடவுள் என்று எண்ணுகிறான் .ஆனால் வியாபர போட்டியில் முதலாளி பென்சில் விலை குறைபதால் ஏற்படும் நஷ்டம் மீண்டும் தொழிலாளி மீது சுமத்தி மேலும் மேலும் அழுத்துகிறான் .இதை தான் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் உலக தொழிலாளர் அனைவரும் ஓன்று பட வேண்டியதன்  அவசியத்தை  தனது நூலின் மூலம்  உலகுக்கு எடுத்துஉரைத்தார் .

இறுதி காலம் 

புகை பிடிப்பதும் பால் கலக்காத காபி குடிப்பதும் மாலை நேர நடை பயிற்சி இவை தான் மார்க்சிற்க்கு  பிடித்த விடயம்.பிச்சை போடாமல் பசியோடு உள்ளவனுக்கு மீன் பிடிக்க கற்று கொடுக்க வேண்டும் என்று எண்ணிய மனிதர் அவர் .

1881 டிசம்பர் மாதம் ஜென்னி என்ற அற்புத மலர் காலம் எல்லாம் இந்த மண்ணின் மக்களுக்கு வேண்டி சிந்தித்த மார்க்சை தாங்கிய  அந்த பெரும் நெருப்பு அணைந்தது .1883 மார்ச் 14 ல் 
தன் 61 வயதில் மக்களுக்காக எந்நாளும் வாழ்ந்த சிந்தித்த மார்க்ஸ் என்னும் மனிதர்களின் இதயம் தனது மூச்சை தனது சாய்வு நாற்காலியில் அமர்ந்த படி தன் தந்தை ,மனைவி மற்றும் மகள்களின் புகை படத்தை கையில் வைத்து கொண்டு இந்த உலகத்தை விட்டு அகன்றது .

அவர் 

"யூதனாக பிறந்தார் 

கிறிஸ்தவன்  ஆக வாழ்த்தார் 

மனிதன் ஆக இறந்தார் 

காலங்கள் தோறும் அவர் பெயர் வரலாற்றில் நிலைத்து இருக்கும் "